யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இதன்மூலம் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகைத் தரும் என எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.