பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளன.
ஸ்ரீ.சு.கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடனான கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, டலஸ் அலகப்பெரும, விஜயதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்கள் சுயாதீன குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.