நாட்டில் மீண்டும் கொரோனா அலைகள் தலை தூக்குவதைத் தடுப்பதற்காக அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் பெறாத அனைவரும் அடுத்த சில நாட்களுக்குள் அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தை சிக்கல்கள் இல்லாமல் முன்னெடுக்க சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.