நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்தவாரம் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிதியமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அந்நாட்டின் பல்வேறு உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பசிலின் இந்திய விஜயம் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.