இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இன்றைய தினம் (12) மின்சார துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இன்று (12) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையான காலப் பகுதிக்குள் P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதே வலயங்களில் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
மேலும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் (13) P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் பிற்பகல் 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர மின்சார தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாளைய தினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையான காலப் பகுதிக்குள் 2 மணிநேர மின்வெட்டும், பிற்பகல் 5 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிட மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. (TrueCeylon)