2020ம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத் தாள் மீள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை இணையவழியாக முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நேற்றைய தினம் (10) முதல் எதிர்வரும் 18ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது. (TrueCeylon)