வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
9ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் இன்று (18) கலந்துகொண்டு, அக்கிராசன உரையை நிகழ்த்திய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் கூறினார். (TrueCeylon)