நாட்டில் போதைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக இந்த இலக்கை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் போதைப்பொருளின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரதான போதைப்பொருள் வர்த்தகர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதன் காரணமாக போதைப்பொருள் வர்த்தகம் செயலிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.