வாகன இறக்குமதியை தடைசெய்ய எட்டப்பட்டுள்ள தீர்மானத்தில், 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படாமையினால், தமக்கு மாற்று வழிகளை நோக்கி நகர வேண்டியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரன்ஜிகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், இலத்திரனியல் வாகனங்களை அதிகளவில் இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TrueCeylon)