வடக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, புத்தளம் – நீர்கொழும்பு பிரதான வீதியின் மாரவில பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் அந்த பகுதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (TrueCeylon)