நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் கடந்த 27ம் திகதி முதல் இன்று வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக நிலையம் கூறியுள்ளது.
16 மாவட்டங்களைச் சேர்ந்த 7167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)